Wednesday, March 30, 2022

நம் குடும்பம்

 அன்பு, அறிவு, பண்பு, பாசம், சொந்தம், பந்தம் முக்கியமென குழந்தைகளுக்கு சொல்லி புரிய வைக்க முடியவில்லை, வாழ்ந்து காட்ட வேண்டுமோ? 


நம் குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகளென இருப்பதால், நம் பிள்ளைகளின் குடும்பத்தில் நமக்கு இடம் ஏது? 

இலக்குகள்

 

இதழ் விரிந்தால் மொட்டு பூவாக மலரும், உன் இதழ் பிரிந்த வார்த்தைகளால் என் இதயத்தில் காதல் பூவாக மலர்ந்தது

திருந்துவதற்கு சந்தர்ப்பம் தானாக வராது, நாம் தான் திருந்த வேண்டும்

பேசாமல் ஏன் இருக்கிறார்கள் என்பதை எப்படி பேசாமல் தெரிந்து கொள்வது

இலக்குகள் நோக்கி மெதுவாக நகரும் போது, இலக்குகளும் நகருகிறது, ஒரு இலக்கை அடைந்துவிட்டால் அடுத்த இலக்கு நோக்கி பயணம் நகருகிறது

அசாதாரண வளர்ச்சி வரவில்லை என சிலர், வளர்ச்சி வரவில்லை என சிலர், வீழ்ச்சி என சிலர் புலம்பல் இல்லா இடம் ஏது

தவறுகள்

 

தவறுகள் கூட சரியாக தெரிகிறது,
மற்றவர்கள் தவறுகளை மதிக்கும் போது

கண்கள் இரண்டு, பார்வை ஒன்று,
கணவன், மனைவி அதுபோல

கிராமத்தையும், நவநாகரீக நாட்டையும், நகரத்தையும் பார்த்தவனுக்கு தெரியும்,
கிராமம் நாம் போற்ற வேண்டிய பொக்கிஷம் என்று

மக்களின் திரும்பி அழைக்கும் அதிகாரம் ஒன்றே, அரசியல்வாதிகளை மக்கள் பணி நோக்கி திரும்பி பார்க்க வைக்கும்

சட்டங்கள் இருந்தாலும், விரைந்து கொடுக்கப்படும் நியாயமான தீர்ப்புகள் மூலம் குற்றங்களை குறைக்கலாம்

களைகளை நீக்கினால் தான் நல்ல விளைச்சலை பார்க்கலாம், கையூட்டு, ஊழலை ஒழித்தால்தான் நேர்ப்பட்ட சமுதாயத்தை பார்க்க முடியும்

மாறாதது

 மாற்றம் ஒன்றே மாறாதது, அவரவர் அடிப்படை குணம் மாறாதது

என் தித்திக்கும் கரும்பே

 என் தித்திக்கும் கரும்பே, மஞ்சள்

நிறத்தவளே,உன் அன்பு 

பொங்கி வரும் பால் போல வந்து, பால் மழையில் நனையும் பானை போல் எங்களை நனைக்கட்டும், சூரியன் கதிர் போல உன் அறிவு கதிர்கள் உலகமெங்கும் பரவட்டும், கோமாதாவாய் குடும்பத்தைக் காக்கும் நீ, மகர சோதியாய் எங்களை வழி நடத்து, ஜல்லிக்கட்டு காளை நாங்கள், நீ எங்களை கயிறு பிடித்து முன் செல்லும் குடும்ப விளக்கு, வழி காட்டி, குடும்பம் சக்கரை பொங்கலாய் குழைந்து தித்திக்கட்டும

ஊரடங்கு

 ஊரடங்கு என் உள்ளத்திற்கு

அல்ல , உனை சுற்றியே என் எண்ணங்கள்

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

 காதலை உன்னிடத்தில் சொல்ல

நினைக்கும் போதெல்லாம், உன் யதார்த்தம் என்னை யோசிக்க வைக்கிறது, சொல்லாத காதல் சரியா? சொல்லிய பின்னர் பிரிதல் சரியா? 

எண்ணுவதை சொல்லாமல், சொல்லாமல் விட்டதை பின்னர் எண்ணுவதா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், எண்ணத்தையும் கொடுத்தேன்

உன்னையும் நம்பு,

 நல்ல நேரம், பணம், நண்பர்கள், உறவினர்கள், கடவுள், சம்பிரதாயம் என எது வேண்டுமானால் நம்பு, அதோடு உன்னையும் நம்பு, உலகம் உன் வசப்படும்

மனத்திண்மை கொண்டு முன்னேறு

 கொண்டாட்டங்கள் முடிந்து, 

திண்டாட்டம் தெரியும் போது, 

மனத்திண்மை கொண்டு முன்னேறு, 

திண்டாட்டம் குறைந்து, கொண்டாட்டம் வரும்

நாளைய விடியல்

 புத்தாண்டின் முதல் நாள், 

புதிய தொடக்கம், எதுவும்

மாறவில்லை, வாழ்க்கையை

மாற்ற முடியும் என்ற

நம்பிக்கையில், நாளைய விடியல்