Thursday, June 2, 2022

வளர்ச்சி

 அசாதாரண வளர்ச்சி வரவில்லை என சிலர், வளர்ச்சி வரவில்லை என சிலர், வீழ்ச்சி என சிலர் புலம்பல் இல்லா இடம் ஏது


இலக்கு


இலக்குகள் நோக்கி மெதுவாக நகரும் போது, இலக்குகளும் நகருகிறது, ஒரு இலக்கை அடைந்துவிட்டால் அடுத்த இலக்கு நோக்கி பயணம் நகருகிறது

பேசாமல்

 பேசாமல் ஏன் இருக்கிறார்கள் என்பதை எப்படி பேசாமல் தெரிந்து கொள்வது

சந்தர்ப்பம்

 திருந்துவதற்கு சந்தர்ப்பம் தானாக வராது, நாம் தான் திருந்த வேண்டும்

பூவாக மலர்ந்தது

 இதழ் விரிந்தால் மொட்டு பூவாக மலரும், உன் இதழ் பிரிந்த வார்த்தைகளால் என் இதயத்தில் காதல் பூவாக மலர்ந்தது

உறுதி செய்ய முடியுமா?

 உன்னை சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும், ஐந்து பேராவது உனக்காக இருப்பார்களா என

உறுதி செய்ய முடியுமா? 

உறவுகள் உயிர்ப்புடன்

 நம்மை நேசிப்பதற்கு, நாம் நேசிப்பதற்கு இன்னும் சிலர் இருப்பதால் தான், இன்னும் உறவுகள் உயிர்ப்புடன் இருக்கிறது

முற்றுப்பெறா சொற்றொடர்

 ஒற்றை சொல் அல்ல "காதல்", அது முற்றுப்பெறா சொற்றொடர்

கடன் வாங்க

 வண்டி வாங்க கடன் வாங்கிய காலம் போய், எரிபொருள் (பெட்ரோல்) போடவே கடன் வாங்க வேண்டுமோ? 

மாறாத அன்பு, தீராத காதல்

 வருடங்கள் கடந்து போக, 

மாறாத அன்பு, தீராத காதல், 

கூடிக் கொண்டே போகும் அன்பு, 

மோகம் குறைந்து நேசம் நீளமாகும் 

நம் காதல் 

செல்வந்தன்

 காதல், நட்பு, உறவுகள் உனக்கு என்று இருந்தால் நீ தான் உலகின் மிக பெரிய செல்வந்தன்


தெரிந்த பக்கங்களை

 பெயர், புகழ், பணம் பெற்ற அண்டை அயலாரின் தெரிந்த பக்கங்களை வைத்து நம்மோடு ஒப்பீடுவதை விட, தெரியாத வலிகள் நிறைந்த பக்கம் பார்த்து நாம் எவ்வளவு நன்றாக இருக்கிறோம் என பார்த்து கொள்ளுங்கள்

ஒதுக்கியது, ஒதுங்கியது

 கால சக்கரத்தில் கடமைகள் மாறும், நிலைமை மாறும், கோபம் கூட நீர்த்து போகும், ஆனால் ஒதுக்கியது, ஒதுங்கியது திரும்பி வாராது

அழகான தருணங்கள்

 வாழ்க்கையின் அழகான தருணங்கள்

பின்னாளில் அசை போட உதவும்

ஒருவருக்கு புதிய அனுபவம்

 ஒருவருக்கு புதிய அனுபவம்,  பலருக்கு பழைய அனுபவம், இருந்தாலும் மகிழ்ச்சி கொள்ளும் நம் உள்ளம்

என்னுயிர் நீதானே

 அருகில் இருந்தாலும், தூரத்தில் இருந்தாலும் என்னுயிர் நீதானே

தனிமை, வெறுமை அல்ல

 உனக்காக நேரம் அது, உன்னதமாக பயன்படுத்த கற்றுக் கொண்டால், தனிமை, வெறுமை அல்ல, கொடுமை அல்ல, தனித்துவமானது

அன்பு கைதி நான்

 சிறைப்பட்டு பல வருடங்களாகிறது  உன் அன்பு சிறையில், இதய சிறையில் ஆயுள் முழுவதும் கைதியாக இருப்பேன், விடுதலையை விரும்பாத அன்பு கைதி நான்

நம்மை" யாரும் பார்பார்களா

 குழந்தையாக, குமரனாக, வாலிபனாக, ஏன் கணவனாக கூட "நான்" என்ற அகங்காரத்தில் இருக்கிறோம், தந்தையான பின் "நாம்" என்ற உணர்வு வரத் தொடங்குகிறது, வயோதிகத்தில் "நம்மை" யாரும் பார்பார்களா, பேசுவார்களா  என்ற ஏக்கம் பெரும் மூச்சாக வருகிறது