Thursday, December 15, 2022

நீ நடமாடும் நேரம்

 ஒரு நொடி பொழுது, உன் மடி சாய்ந்து கண் மூடும் வேளையில் ஆயிரம் கவிதைகள் அதுவே வரும், 

உன் இடை பார்த்து, இடை இடையே இடைவெளி விட்டு நடந்தால் கூட,, இடை செல்லும் குளிர் காற்று சுடும், 

நம் இமை மூடி, பார்வை உரசும் வேளையில் மின்னல் வெட்டு நம்மிடையே தோன்றும்


ஓராயிரம் பேர் பார்த்தாலும், ஓராயிரம் விழிகள் தொடர்ந்தாலும், ஒரு நொடியில் நம் விழிகள் சந்தித்து, மறு நொடியில் சங்கமிக்கும்


விரல் ஸ்பரிசம் மின் காந்த அலையாக இதயத்தில் மின்சாரம் பாய்ச்சும், இதயம் என்னவோ தானியங்கி போல் உன் பின்னே ஓடும்


இசையும் தாளமும் நீ நடமாடும் நேரம் 


உருகும் பனி கூட உறைந்தது, அவளுக்காக உருகும் எனை விட அது அதிகம் உருகுவதில்லையென


நான் உன்னை பார்க்கும் போது, உன் இமைகள் பட படக்கும், இதயம்💜❤️ தட தடக்கும், இரண்டும் சேர்ந்து "சிம்பொனி" இசைக்கும் 

No comments:

Post a Comment