இரைச்சல் மிகுந்த உலகில், இரு இதயங்கள் துடிக்கும் கீதம், இருவருக்கு மட்டும் கேட்கும், இருவருக்குள்ளும் ஒரு மௌனம் உன்னை அணைக்கும் போது
Tamil Kavithaigal - Kavithai Karpanai Virpanaiku alla
Full of tamil poems - kavithaigal- kaadhal,social awareness, social information
Friday, April 3, 2026
அகம் சிரிக்கிறது, முகம் சிரிக்கிறது
அவளை பார்த்தவுடன் அகம் சிரிக்கிறது, முகம் மறுக்கிறது, எங்கே வீழ்ந்துவிடுவோமென இறுக்கம் காட்டி நிற்கிறது, அரை நொடி பொழுதில் அவளை கண்டு அகம் சிரிக்கிறது, முகம் சிரிக்கிறது
முக்காலத்தை உணராமல்
ஆசையில் உழன்று வீடுபேரடைய துடிக்கும் போது, துடிப்பு நின்று விடுகிறது, முக்காலத்தை உணராமல், இக்காலத்தில் வாழ்வதால், இக்காலமும் வேண்டும், முக்காலமும் வேண்டும்
எதுவும் நம் கையில் இல்லை
அறிவியல் ஆன்மீகம் ஆண்டவர், தன்னம்பிக்கை, உழைப்பு, அதிர்ஷ்டம் அனைத்தும் செய்து பார்த்து இறுதியில் சொல்வார்கள் எதுவும் நம் கையில் இல்லை
விழி ஈர்ப்பு விசை
புவி ஈர்ப்பு விசையை விட, விழி ஈர்ப்பு விசை அதிகம் அறிஞர்களே, காந்த விழிகள் எனை இழுக்கிறது அவளை நோக்கி
Subscribe to:
Comments (Atom)